யாழில் காலணி வாங்கிக் கொடுக்காததால் விபரீத முடிவெடுத்து உயிரிழந்த மாணவன்!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் தந்தை உதைபந்தாட்டத்திற்கு தேவையான காலணியை வாங்கிக் கொடுக்கவில்லை என 14 வயது மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மானவன் இன்றைய தினம் (24-04-2023) இவ்வாறு தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். மேலும்,... Read more »

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!

பாடசாலைகளில் தரம் 2 முதல் தரம் 11 வரையான வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இவ் விடயம் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 ஆம் வகுப்புக்கு... Read more »
Ad Widget

இன்றைய ராசிபலன்25.04.2023

மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமாகச் செயல்படும் நாள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்கள் குடும்பம் தொடர்பான விஷயத்தில் உங்களிடம் ஆலோ சனை கேட்டு வருவார்கள். சிலருக்கு அவ்வப்போது சிறுசிறு சலனங்கள் ஏற்பட்டு நீங்கும். மாலை யில் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு... Read more »

வடக்கு கிழக்கிற்கு அழைப்பு விடுத்துள்ள சாணக்யன்

ஏப்ரல் 25ஆம் திகதி அதாவது நாளைய தினம் வடக்கு, கிழக்கில் அனைவரும் பூரண நிர்வாக முடக்கலுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத... Read more »

காலாவதியான பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்கள் கைது

காலாவதியான பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களை நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதன்போது பண்டிகை காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் உணவு பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகளை விற்பனை செய்த 8,231 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட... Read more »

கொழும்பின் பல பகுதிகள் இன்று இருளில் மூழ்கின!

கொழும்பின் பல பகுதிகளில் இன்று (24) திங்கட்கிழமை மாலை மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதனால் இருளில் மூழ்கியது. மருதானை உப மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக மின்விநியோக தடையேற்பட்டதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது. குறுகிய நேர திருத்தப் பணிகளுடன் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியதாகவும்... Read more »

வடக்கு கிழக்கிலே பூரண ஹர்த்தால் ஆதரவு கூறும் மட்டு இந்து இளைஞர் பேரவை

எதிர்வரும் 25.04.2023 அன்று வடக்கு கிழக்கிலே பூரண ஹர்த்தால் இடம்பெறவுள்ளது. இதன் தன்மையை உணர்ந்து அனைத்து இந்து மக்களும் இதற்குப் பூரண ஆதரவை வழங்க வேண்டும் என்று அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம். மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை இந்த வேண்டுகோளை முன் வைக்கின்றது.... Read more »

வாராந்த பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவு

சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால.திருகுணானந்தக்குருக்கள் அவர்கள் நடாந்தும் வாராந்த பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 03  (விறன்மிண்ட நாயனார் ) ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்கு பண்டாரபுலம் திருப்பதியில் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் தான்தோன்றி... Read more »

இறந்த தாய்க்கு மகன் செய்த மரியாதையை!

தாயின் சடலத்தை வீட்டின் வீதி வழியாக கொண்டு செல்ல அனுமதி வழங்காத மகன் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. இச் சம்பவம் அனுராதபுரத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஹொரவபொத்தான பிரதேசத்தில் 83 வயதான தாய் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது சடலம் மகளின்... Read more »

நெடுந்தீவு கொலை சம்பவத்திற்கு பயன்படுத்திய கத்தி கிணற்றில் இருந்து மீட்பு!

யாழ் நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கத்தி கிணறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் கொலைகாரன் அணிந்திருந்த சாரமும் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. நெடுத்தீவு ஐவர் கொலைச் சந்தேகநபரான் ரகுவை 2 நாள்கள் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்றுறை... Read more »