அம்பாறை மாவட்டம் – கல்மடுவ பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாணவி கடந்த 28 ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற நிலையில், பாடசாலை பதிவேட்டில் அவரது பெயர் இடம்பெறாததை அடுத்து பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். மேலும்... Read more »
இலங்கையின் சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் தற்போது கொழும்பு தாமரைக் கோபுரமும் இடம்பிடித்துள்ளது. தாமரை கோபுரம் திறக்கப்பட்டதிலிருந்து இதுவரை சுமார் ஒரு மில்லியன் மக்கள் வருகை தந்துள்ளதாக கோபுரத்தின் முகாமைத்துவ பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது. நேற்றைய(08) நிலவரப்படி தாமரை கோபுரத்திற்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை சுமார்... Read more »
பொலன்னறுவை – கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு சென்ற தனியார் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளதாகவும், 40 பேருக்கு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (09-07-2023) இரவு... Read more »
மேஷ ராசி அன்பர்களே! மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டா கும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். காரமான உணவுகளைத் தவிர்க்கவும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சற்றுக் குறைவாகத்... Read more »
வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக கடமையாற்றும் சமன் பந்துசேன ஓய்வுபெற இன்னும் ஒரு வருடம் இருக்கின்ற நிலையில் அவரை வடக்கு மாகாணத்திலேயே கடமையாற்ற அனுமதிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சாள்ஸ் ஜனாதிபதி செயலகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தகவல்கள்... Read more »
புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வடக்கு ஆளுநர் தயாரா? என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். புலம்பெயர் தமிழர்களை வடக்கில் முதலீடு செய்ய வருமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சாள்ஸ் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.... Read more »
யாழ்ப்பாணம் – வேலணை மத்திய கல்லூரியில் ஏற்பட்ட அதிபர் வெற்றிடம் தொடர்பாக, கடந்த ஏப்ரல் மாதம் பத்திரிகை வாயிலாக விண்ணப்பம் கோரப்பட்டு, மே மாதம் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டிருந்தது. நேர்முகத் தேர்வில் தரம் 1 அதிபர் சேவையைச் சேர்ந்த தகுதியான ஒருவர் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். குறித்த நியமனம்... Read more »
யாழ். வண்ணை ஶ்ரீ வீரகாளி அம்மன் ஆலய தொண்டர் சபையின் ஏற்பாட்டில் ஆலயச் சூழலிற்கு அருகில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்கு கல்வி மேம்பாட்டு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. யாழ். வண்ணை ஶ்ரீ வீரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த... Read more »
மசகு எண்ணெய் விலையில் திருத்தத்தை ஏற்படுத்துவது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் அடுத்த வாரம் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நேற்று வியாழக்கிழமை (06) இதனை தெரிவித்துள்ளார். அத்தோடு கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும்... Read more »
தென் மாகாணத்தில் பாதாளக் குழுக்களின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில் தினமும் அவர்களுக்குள் மோதல் இடம்பெற்று கொலைகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் கொள்ளைக்காரர்களின் ஆட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகக் கொலையாளிகளைக் கைது செய்வதற்காகப் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் களத்தில் குதித்துள்ளனர். இதனையடுத்து விசேட அதிரடிப் படையினருக்கு பயந்து... Read more »

