5-ம் தலைமுறை போர் விமானங்களை வீழ்த்தத் தயார்” – ஈரானிய வான் பாதுகாப்புத் தளபதி அதிரடி அறிவிப்பு!

ஈரானிய வான்பரப்பில் ஊடுருவும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அதிநவீன ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் மற்றும் மேம்பட்ட ஆளில்லா விமானங்களை (Drones) வேட்டையாடத் தங்கள் படைகள் முற்றிலும் தயாராக உள்ளதாக ஈரானிய தேசிய வான் பாதுகாப்பு தலைமையகத்தின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் அலிரேசா எல்ஹாமி தெரிவித்துள்ளார்.

ஈரானில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நவீன உபகரணங்கள் மற்றும் “நவீன உள்நாட்டுப் பாதுகாப்பு முறைகளை” கொண்டு எதிரி நாட்டுப் போர் விமானங்களை எதிர்கொள்ளத் தங்கள் வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வான் பாதுகாப்பு அமைப்புகளில் புகுத்தப்பட்டுள்ள புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தந்திரோபாயங்கள் காரணமாக, எதிரிப் படைகள் தற்போது பெரும் குழப்பத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

பிப்ரவரி 28 முதல் தொடங்கி நடைபெற்று வரும் இந்த மோதலில், ஈரானிய வான் பாதுகாப்புப் படைகள் இதுவரை ஈர்க்கக்கூடிய வெற்றிகளைப் பெற்றுள்ளதாகத் தளபதி பட்டியலிட்டுள்ளார்:

160-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் இதில் அமெரிக்காவின் அதிநவீன ட்ரோன்கள் மற்றும் இஸ்ரேலின் ஹெர்ம்ஸ் , லூகாஸ் போன்ற மேம்பட்ட ட்ரோன்கள் அடங்கும்.

அமெரிக்காவின் F-15E உட்பட பல அதிநவீன விமானங்கள் ஈரானிய ஏவுகணைகளால் வீழ்த்தப்பட்டுள்ளன.

“எதிரியின் தந்திரங்களை முறியடிக்க எங்களிடம் புதிய கண்டுபிடிப்புகள் உள்ளன” என்று கூறியுள்ள தளபதி, ஈரானின் வான் பாதுகாப்பு வலிமை என்பது வெறும் எண்ணிக்கை சார்ந்தது மட்டுமல்ல, அது அதிநவீனத் தொழில்நுட்பம் சார்ந்தது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: admin