அவசர அறிவிப்பு: ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கர்களுக்கு உத்தரவு!
ஈரானில் நிலவி வரும் அரசியல் சூழல் மற்றும் பாதுகாப்பற்ற நிலையைத் தொடர்ந்து, அங்குள்ள அமெரிக்கக் குடிமக்கள் அனைவரும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்காவின் மெய்நிகர் தூதரகம் (Virtual Embassy) மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
📍 ஈரானில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாலும், சாலை மறியல்கள் மற்றும் பொதுப் போக்குவரத்துத் தடைகள் நிலவுவதாலும், காலதாமதம் செய்யாமல் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளியேறுவதற்கு அமெரிக்க அரசின் உதவியை எதிர்பார்க்க வேண்டாம் என்றும், விமானச் சேவைகள் எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம் என்பதால் முன்கூட்டியே திட்டமிடுமாறும் கூறப்பட்டுள்ளது.
விமான வசதி இல்லாத பட்சத்தில், பாதுகாப்பான சூழல் இருந்தால் துருக்கி (Turkey) அல்லது ஆர்மீனியா (Armenia) வழியாக தரைவழியாக வெளியேறுவதை அமெரிக்க குடிமக்கள் பரிசீலிக்கலாம்.
ஈரானில் இணையச் சேவைகள் (Internet) மற்றும் தொலைபேசி இணைப்புகள் எந்த நேரத்திலும் துண்டிக்கப்படலாம் என்பதால், மாற்று தகவல் தொடர்பு வசதிகளைத் தயாராக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க-ஈரான் ஆகிய இரு நாடுகளின் குடியுரிமை கொண்டவர்கள் ஈரானிய கடவுச்சீட்டைப் (Passport) பயன்படுத்தியே வெளியேற வேண்டும். ஈரானிய அரசு இரட்டைக் குடியுரிமையை அங்கீகரிக்காததால் அவர்கள் கைது செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
⚠️ போராட்டங்கள் நடைபெறும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்.போதுமான உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளைச் சேமித்து வைத்துக் கொள்ளவும்.உங்களின் இருப்பிடம் மற்றும் பாதுகாப்பு குறித்து உறவினர்களுக்குத் தொடர்ந்து தெரியப்படுத்தவும்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் உள்நாட்டுப் போராட்டங்கள் காரணமாக இந்த உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.


