திருகோணமலை – கொழும்பு இடையே நாளை முதல் புதிய காலை நேர ரயில் சேவை!

திருகோணமலை – கொழும்பு இடையே நாளை முதல் புதிய காலை நேர ரயில் சேவை!

திருகோணமலை மற்றும் கொழும்பு கோட்டை இடையிலான நேரடி புகையிரத சேவை நாளை முதல் (20.12.2025) அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த புதிய சேவையின் கால அட்டவணை விபரங்கள் பின்வருமாறு:
பயண நேரங்கள்: திருகோணமலை – கொழும்பு (வண்டி எண்: 7084): காலை 07:00 மணிக்கு திருகோணமலையிலிருந்து புறப்படும்.

கொழும்பு கோட்டை – திருகோணமலை (வண்டி எண்: 7083): காலை 06:00 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்படும்.

குறிப்பு: பொதுமக்கள் நீண்டகாலமாக இரவு நேர ரயில் சேவையை எதிர்பார்த்துக் காத்திருந்த போதிலும், தற்போது முதற்கட்டமாக காலை நேர சேவை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ரயில் போக்குவரத்து குறித்து இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: admin