நீதிமன்றில் சரணடைந்த அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பிணையில் விடுதலை.!!
தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய சம்பவம் தொடர்பாக நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (17) சரணடைந்ததை அடுத்து அவரை ஒரு இலட்சம் ரூபா, இருவர் கொண்ட ஆட்பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்து, எதிர்வரும் 2026 ஜனவரி 20 ம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.

