நுவரெலியா மாவட்டத்திற்குச் செல்லும் அனைத்து வீதிகளும் திறக்கப்பட்டுள்ளன.
இதேவேளை டித்வா புயலால் நுவரெலியா மாவட்டத்தில் 73 பேர் உயிரிழந்துள்ளதோடு 23 பேர் காணாமலாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் 21,846 பேர் 188 பாதுகாப்பான மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

