வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்று மூடல்

வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்று மூடல்

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்று மாநகரசபை சுகாதார பரிசோதகர்களால் இன்று (11.11) சீல் வைத்து மூடப்பட்டது.

வவுனியா, ஹொரவப்பொத்தனை வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவில் புழு காணப்பட்டதாகவும், சுகாதார சீர்கேட்டுடன் குறித்த உணவகம் இயங்கியதாகவும் தெரிவித்து வவுனியா மாநகரசபை பொது சுகாதார பரிசோதகர்களால் நீதிமன்ற உத்தரவுக்கமைய மூடப்பட்டது.

இன்றில் (11.11) இருந்து எதிர்வரும் 25 ஆம் திகதி வரை குறித்த உணவகம் மூடப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் சுகாதார பரிசோதகர்களின் அறிவுறுத்தலுக்கமைய திருத்த வேலைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin