இரட்டைக் கொலை வழக்கு: 6 பேருக்கு அம்பாறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை!

இரட்டைக் கொலை வழக்கு: 6 பேருக்கு அம்பாறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை!

பதியத்தலாவைப் பகுதியில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கில், குற்றவாளிகள் ஆறு பேருக்கு அம்பாறை மேல் நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

 

குற்றச்சாட்டுகள் நிரூபணம்:

2015ஆம் ஆண்டில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், குறித்த 6 பேரும் இரண்டு நபர்களை முதலில் தாக்கி, அதன் பின்னர் அவர்கள் மீது வாகனம் ஒன்றினால் மோதி படுகொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

வழக்கை விசாரித்த அம்பாறை மேல் நீதிமன்றம், குறித்த 6 நபர்களும் இந்தக் கொலைக் குற்றவாளிகள் என்பது எந்தச் சந்தேகத்திற்கும் இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது எனக் கூறி இந்தத் தீர்ப்பை அறிவித்தது.

 

குற்றவாளிகள் ஆறு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு, அம்பாறைப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin