போதைப்பொருள் குற்றச்சாட்டு: கணவர், மகன் கைது செய்யப்பட்டதால் NPP பிரதேச சபை உறுப்பினர் பதவி விலகல்

போதைப்பொருள் குற்றச்சாட்டு: கணவர், மகன் கைது செய்யப்பட்டதால் NPP பிரதேச சபை உறுப்பினர் பதவி விலகல்

பேலியகொடை நகர சபையின் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் அங்கம் வகித்த பெண் உறுப்பினர் ஒருவர், அவரது கணவர் மற்றும் மகன் இருவரும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

 

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட சபை உறுப்பினரான திஸ்னா நிரஞ்சலா குமாரி (Disna Niranjala Kumari), இந்தச் சம்பவத்தால் தாம் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், இது ஒரு தனிப்பட்ட மற்றும் தார்மீக முடிவு என்றும் தெரிவித்துள்ளார்.

 

தூய்மையான அரசியலுக்கு ஆதரவு

 

கம்பஹா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிக்கு அனுப்பிய தனது இராஜினாமா கடிதத்தில், தனது கட்சி முன்னெடுத்துச் செல்லும் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை நிலைநிறுத்துவதற்கும், தற்போது நடந்து வரும் சட்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கும் தாம் விரும்புவதாக திருமதி குமாரி குறிப்பிட்டுள்ளார். அதன் பிரகாரம், NPP பொதுச் செயலாளருக்கும் ஒரு பிரதி அனுப்பப்பட்டுள்ளது.

 

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் சட்ட நடவடிக்கைகளுக்காக தொடர்ந்து எதிர்வரும் 12 ஆம் திகதிவரை தடுப்புக்காவலில் வைக்கப்பட தம்புத்தேக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin