கொழும்பு மாநகர சபை: இன்று முதல் 3 நாட்களுக்கு அனர்த்த அவசரகால நிலை அறிவிப்பு

கொழும்பு மாநகர சபை: இன்று முதல் 3 நாட்களுக்கு அனர்த்த அவசரகால நிலை அறிவிப்பு

கொழும்பு மாநகர சபை (CMC), இன்று (ஒக்டோபர் 16) முதல் ஒக்டோபர் 18, 2025 வரை அமுலாகும் வகையில் அவசரகால அனர்த்த பதில் நடவடிக்கைக் காலத்தை அறிவித்துள்ளது.

​கொழும்பு மாநகர சபை தனது இணையத்தளத்தில், “ஒக்டோபர் 16 முதல் 18 வரை அறிவிக்கப்பட்டுள்ள அவசரகால அனர்த்த சூழ்நிலைக்கு பதிலளிக்கும் வகையில், கொழும்பு மாநகர சபை உங்களுக்கு உதவ முழுமையான தயார் நிலையில் உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

 

​உள்ளூர்வாசிகள் தகவல்களைப் பெறுவதற்கும், அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கும் கொழும்பு மாநகர சபை இரண்டு தொலைபேசி இலக்கங்களை அறிவித்துள்ளது:

​தகவல்களுக்கு: 011-2422222

​அவசரகால உதவிக்கு: 011-2686087

Recommended For You

About the Author: admin