தட்டுவான் கொட்டி பகுதியில் காணப்படும் வெடிகுண்டு..!
கிளிநொச்சி தட்டுவான் கொட்டி பகுதியில் இன்னும் பல வெடி குண்டுகள் வெடிக்காத நிலையில் காணப்படுகிறது அதாவது நேற்றைய தினம் (29) வெடி குண்டினை பிளந்து மருந்தினை எடுக்க முயன்ற போது பாரியளவு விபத்துக்கு உள்ளாகி அவசர சிகிச்சையில் உள்ள நிலையில்
அதனை தொடர்ந்து தட்டுவான் கொட்டி பகுதி முழுவதும் அவதானிப்பு நடவெடிக்கை மேற்கொண்ட போது பல பகுதிகளில் வெடிக்காத நிலையில் வெடிகுகள் காணப்பட்டுள்ளது அதனை அகழ்ந்து எடுப்பதற்கு நீதி மன்றத்தின் உத்தரவு பெறுவதற்கான நடவெடிக்கைகள் மேற் கொண்டு வருகிறது
குறித்த பிரதேசம் முழுவதும் மனிதாவிபமான கன்னி வெடி அகற்றுதல் எனும் தொனிப்பொருளில் வெடிகுண்டுகள் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது அவ் தொண்டு நிறுவனம் தமது பணியினை ஒழுங்காக செய்து இருந்தால் இவ்வாறான பாரியளவு விபத்துக்கள் ஏற்பட்டு இருக்காது என மக்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.


