இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80ஆவது அமர்வில் தனது முதல் உரையை ஆற்றினார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 80ஆவது அமர்வின் பொது விவாதத்தில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது முதல் உரையை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், வறுமை ஒழிப்பு, வளரும் நாடுகளின் கடன் சுமை, மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான போராட்டம் போன்ற முக்கிய உலகளாவிய பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தினார். பதவியேற்ற பிறகு திசாநாயக்கவின் ஐ.நா. பொதுச் சபையில் இது முதல் தோற்றம் ஆகும்.
செவ்வாய்க்கிழமை காலை (அமெரிக்க நேரப்படி) அவர் நியூயோர்க்கில் உள்ள ஜோன் எப் கென்னடி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவரை ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி, முன்னாள் பிரதம நீதியரசரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஜயந்த ஜயசூரிய, மற்றும் இலங்கைத் தூதுக்குழு உறுப்பினர்கள் வரவேற்றனர். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி திசாநாயக்க ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் அவர்களைச் சந்தித்தார்.
மேலும் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளார். அத்துடன், அமெரிக்காவில் உள்ள இலங்கை சமூகத்தினரையும் அவர் சந்திப்பார்.
ஜனாதிபதி என் முழு உரை சிங்களத்தில் கீழே கருத்துப் பகுதியில்

