பேக்கரி பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு!

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி இன்று அமுலுக்கு வந்ததன் பின்னர் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் மீண்டும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் (ACBOA) தெரிவித்துள்ளது.

ரொட்டி உள்ளிட்ட உற்பத்திப் பொருட்களுக்கு புதிய வரி விதிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவுக்கு வரி விதிக்கப்படவுள்ளதுடன், பிரதான கோதுமை மா இறக்குமதியாளர்கள் தமது விலைகளை அதிகரித்தால் அது தானாகவே வெதுப்பக தொழிலை பாதிக்கும் என கூறியுள்ளார்.

மேலும் அனைத்து காரணிகளின் விளைவாக பேக்கரி பொருட்களின் விலைகள் உயரும், ஆனால் அவை எந்த விகிதத்தில் அதிகரிக்கப்படும் என்பதை அவர்கள் தீர்மானிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor