வட மாகாண அவைத் தலைவர் சீ. வி. கே. சிவஞானம் அவர்கள் இன்றைய தினம் (12.08.2025) பி. ப. 02.00 மணிக்கு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன் போது கல்லுண்டாய் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற கழிவகற்றல் செயற்பாடு தொடர்பாகவும், செம்மணியில் ஏற்கனவே உப்பளம் இருந்த இடத்தில் கட்டுமாணப் பணிகளை மேற்கொள்ளும் போது சாத்தியப்பாட்டு அறிக்கையினை பெற்றுக்கொள்ளுதல், யாழ்ப்பாணத்திற்கான கழிவு முகாமைத்துவம் மற்றும் பாலியாற்றிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான குடிநீரை கொண்டு வருதல் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.


