கிளிநொச்சி காவல் நிலையத்தில் கைதி தற்கொலை

கிளிநொச்சி காவல் நிலையத்தில் கைதி தற்கொலை

கிளிநொச்சி காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர், காவல் நிலையத்திலேயே தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் நேற்று (ஜூலை 25, 2025) மதியம் 12:08 மணியளவில் நடந்துள்ளது. குடும்பத் தகராறு ஒன்றின் தொடர்பாக விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட சந்தேகநபர், காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, தனது சாரத்தின் ஒரு பகுதியைக் கிழித்து அதைக் கொண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்கொலை செய்துகொண்டவர் கிளிநொச்சி, ரயில்வே வீதியைச் சேர்ந்த 66 வயதான இரத்தினம் ராசு என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin