அரசியலுக்குள் நுழையும் பிரபல சிங்கள நடிகை!

நாட்டின் தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் தான் அரசியலுக்கு வருவது குறித்து தீர்மானம் எடுக்க தயாராக இருப்பதாக பிரபல நடிகை தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் நிலை குறித்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

அரசியலுக்கு வர வேண்டும் என்று தான் நினைத்ததில்லை.ஆனால் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியால் தான் இந்த முடிவை எடுக்க நேரிட்டுள்ளது.

நாடாளுமன்றத்திற்கு வெளியே பல புத்திஜீவிகள்
“அரசியலில் சேர வேண்டும் என்று நான் நினைத்ததில்லை. எனக்கு அநியாயம் நடந்தது.தனக்கு நேர்ந்த அநீதியால் அரசியலுக்கு வருவது குறித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது.

இந்த நாட்டிற்காக உழைக்க விரும்புவோருக்கு ஒரு வாய்ப்பை வழங்குவதற்கான தேர்தலுக்கு தற்போது சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.இந்த நாட்டைப் பற்றி இன்னும் சிந்திக்கும் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்தில் குறைவு.

எனினும் நாடாளுமன்றத்திற்கு வெளியே பல புத்திஜீவிகள் உள்ளனர். இதேவேளை தனக்கு நேர்ந்த அநீதியால் அரசியலுக்கு வருவது குறித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது.

Recommended For You

About the Author: webeditor