வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் உறவினர்கள், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டம் நேற்று (16.09.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டம்
கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப் பகுதியில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 12 அரசியல் கைதிகளை நீதிமன்றத்தில் முற்படுத்தாது விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

உணவு தவிர்ப்பு போராட்டம்
இவ்வாறு அரசியல் கைதிகள் தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பயங்கரவாத தடைச் சட்டத்தினை எதிர்த்து நாடு தழுவிய ரீதியிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor