இனி உங்களுக்கு வரும் அழைப்புக்களுக்கு AI பதிலளிக்கும்

அனைத்து துறையிலும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தான் ஆதிக்கம் செலுத்துகிறது.

அந்த வகையில் தற்போது ட்ரோகோலர் செயலி AI இன் உதவியுடன் பயனரின் சொந்தக் குரலில் அழைப்புகளுக்கு பதிலளிக்க முடியும்.

இந்த அம்சத்தில் பயனர்கள் அவர்களது விருப்பப்படி தயார் செய்த பதில்களை அழைப்புகளுக்கு கொடுக்க முடியும்.

அதாவது, தொலைபேசி அழைப்பை எடுக்கமுடியாத அளவுக்கு பிஸியாக இருக்கும்போது, ரெடிமேட் பதில்களை உங்கள் குரலுக்கு பதிலாக செயற்கை நுண்ணறிவே கொடுத்துவிடும்.

இதற்காக மைக்ரோசொப்ட் உடன் ட்ரூகோலர் இணைந்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் உங்கள் குரலை செயற்கையாக உருவாக்கக்கூடிய அம்சம் உள்ளது.

இன்னும் சில கிழமைகளில் Truecaller இந்த தனிப்பட்ட குரல் அம்சத்தை பல நாடுகளில் உள்ள பயனர்களுக்கும் உபயோகிக்கக்கூடிய வகையில், ஏற்பாடுகள் செய்யவுள்ளது.

Recommended For You

About the Author: admin