காரை சோதனை செய்ய பொலிஸாரிடம் மறுப்பு தெரிவித்த நடிகை நிவேதா பெத்துராஜ்

வாகன சோதனையில் ஈடுப்பட்ட பொலிஸாரிடம் நடிகை நிவேதா பெத்துராஜ் வாக்குவாதம் செய்யும் காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ்ஜின் கார் சென்று கொண்டிருந்த போது, பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.

நிவேதா பெத்துராஜிடம் காரின் டிக்கியை திறக்க கூறிய போது அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும், பொலிஸாரிடம் தொடர்ந்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended For You

About the Author: admin