அமெரிக்காவில் நடந்த கோர விபத்து: இந்திய மாணவி சம்பவ இடத்திலேயே பலி

அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பை முடித்த 25 வயதான சௌமியா என்பவரே உயிரிழந்துள்ளதாகவும், இந்த விபத்து கடந்த 26 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டிற்கு பொருட்கள் வாங்கிக்கொண்டு திரும்பும் போது இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா சென்ற சௌமியா படிப்பை முடித்துக்கொண்டு வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், உடலை இந்தியாவிற்கு கொண்டுவர உதவி செய்யுமாறு உறவினர்கள் கோரிக்கை அரசாங்கத்திடம் விடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin