தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைக்கு புதிய உறுப்பினர்கள்

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைக்கு மூன்று புதிய நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டின் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை சட்டத்தில் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய உறுப்பினர்களை நியமித்துள்ளார்.

இதன்படி, பட்டய கணக்காளர் சுஜீவ முதலிகே, ஜனாதிபதி சட்டத்தரணி பாலித குமாரசிங்க மற்றும் இலங்கை நிர்வாக சேவையின் தரம் 1 சிரேஷ்ட அதிகாரி சுசந்த கஹவத்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் நியமிக்கப்பட்ட மூன்று நிர்வாக சபை உறுப்பினர்கள் இராஜினாமா செய்ததை அடுத்து இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலதிக செய்திகள்

Recommended For You

About the Author: admin