அவுஸ்திரேலிய எழுத்தாளருக்கு சீனா ஒத்திவைக்கப்பட்ட மரண தண்டனை

உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதான அவுஸ்திரேலிய எழுத்தாளர் யாங் ஹெங்ஜுனுக்கு 5 ஆண்டுகளின் பின்னர் சீன நீதிமன்றம், மரண தண்டனையை ஒத்தி வைத்துள்ளது.

அவுஸ்திரேலிய அதிகாரிகளின் கூற்றுப்படி, தண்டனை இரண்டு ஆண்டுகளின் பின்னர், அவரது நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் தண்டனையாக மாற்றப்படலாம்.

யாங் ஹெங்ஜுன் – சீன விவகாரங்களைப் பற்றி வலைப்பதிவு செய்த ஒரு எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியர்.

எனினும் அவர் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்துள்ளார்.

அவரது விடுதலைக்காக மனுத்தாக்கல் செய்த அவுஸ்திரேலிய அரசாங்கம், இந்த முடிவால் அதிருப்தியடைந்துள்ளது.

Recommended For You

About the Author: admin