விவசாயிகளுக்கு அரசாங்கத்தின் சலுகை

பெரும்போகத்தில் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 17,000 ரூபா பெறுமதியான டீசலை இலவசமாக வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் வறட்சி காரணமாக பயிர்கள் சேதமடைந்த 65,000 ஏக்கர் விவசாயிகளுக்கே இந்த சலுகை வழங்கப்படவுள்ளது.

உர கொள்முதல் செய்ய அரசு வழங்கும் மானியம் 15,000 ரூபாவுடன் ஒரு ஹெக்டேருக்கு இழப்பீடாக ஒரு இலட்சம் ரூபாவுக்கு கூடுதலாக இந்த சலுகை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

எஞ்சியுள்ள டீசல்
கடந்த பருவத்தில், இலங்கையில் உள்ள விவசாயிகளுக்கு சீன அரசாங்கம் 6.5 மில்லியன் லீட்டர் டீசலை இலவசமாக விநியோகித்திருந்தது.

எனினும் பெருமளவிலான சிறுபோக நெல் விவசாயிகள் அதனை பெற்றுக்கொள்ள வராததால் 02 மில்லியன் லீட்டர் டீசல் எஞ்சியுள்ளதாக அமைச்சு தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor