கொழும்பில் பயணிக்கும் சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

கொழும்பு, பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் உடைந்த நிலையில் காணப்படும் மேம்பாலத்தை அகற்றும் பணிக் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (05) முதல் ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில், மெரைன் ட்ரைவ் வீதி மறு அறிவித்தல் வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே குறித்த வீதியைப் பயன்படுத்துவோர் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மாற்று வீதிகள்
இதேவேளை, வெள்ளவத்தையிலிருந்து மரைன் டிரைவ் வழியாக கொள்ளுப்பிட்டி செல்லும் வாகனங்கள் பம்பலப்பிட்டி புகையிரத நிலைய வீதியால் காலி வீதி வழியாக சென்று கொள்ளுப்பிட்டி நோக்கி செல்ல முடியும்.

அத்துடன் மரைன் டிரைவால் கொள்ளுப்பிட்டியில் இருந்து வெள்ளவத்தை நோக்கி செல்லும் வாகனங்கள் க்ளென் ஆர்பர் பிளேஸால் திரும்பி, காலி வீதியில் பிரவேசித்து பின்னர் டூப்ளிகேஷன் வீதியால் வெள்ளவத்தைக்கு செல்ல முடியுமெனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor