மன்னாரில் சட்டவிரோதமாக தங்க கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது!

மன்னார் – ஒலுதுடுவை கடற்பிராந்தியத்தில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது நாட்டிலிருந்து கடல் வழியாக தங்கம் கடத்த முயன்ற நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரின் முயற்சிகளின் விரிவாக்கமாக, வடமத்திய கட்டளையில் உள்ள SLNS கஜபா கடந்த (03.11.2023) ஆம் திகதி மாலை ஒழுதுடுவைக்கு அப்பால் இந்த விசேட நடவடிக்கையை மேற்கொண்டதுடன், கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை இடைமறித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட பொருட்கள்

மேலதிக சோதனையின் போது, உள்ளூரிலிருந்து கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் டிங்கி படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 02 கிலோ 150 கிராம் தங்கம், 05 சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்டது.

கடற்கரையை அண்மித்த பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக சோதனைகளின் போது இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28 முதல் 56 வயதுக்குட்பட்ட வான்கலே மற்றும் மன்னார் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கம் மற்றும் பிற வாகனங்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறையில் உள்ள சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Recommended For You

About the Author: webeditor