ரகசிய காதலை அம்பலப்படுத்தியதால் 67 வயது நபர் படுகொலை!

இருவருக்கு இடையேயான ரகசியக் காதலை பலர் மத்தியில் குடிபோதையில் வெளிப்படுத்தியதற்காக ஒருவர் மற்றொருவரை கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மூன்று பிள்ளைகளின் தந்தை படுகொலை
உயிரிழந்தவரும். சந்தேகநபரும் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்த போதே, உயிரிழந்தவர் ரகசியக் காதலை வெளிப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை வடக்கு, மஹா வஸ்கடுவ கந்த பன்சல வீதியில் வசித்து வந்த 67 வயதான ரமோன் ஜயதிஸ்ஸ என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கட்டையையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகநபரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor