சிகிரியாவை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான அறிவிப்பு!

சீகிரியாவை பார்வையிட செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, வெளிநாட்டு பயணிகளுக்கு 10 மொழிகளில் சீகிரியா குன்று தொடர்பான தெளிவூட்டல்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மொழிப் பிரச்சினையால் இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையிலேயே குறித்த தெளிவூட்டல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor