8 நாடுகளை ஆட்சி செய்த இந்து மன்னர்கள்… எந்தெந்த நாடுகள் தெரியுமா?

இந்தியாவில் இருந்து இந்து மதம் தோன்றி தெற்காசிய நாடுகளின் அரச மதமாக மாறிய காலம் ஒன்று இருந்தது. இந்தியாவில் பல்லவ மன்னர்கள் இருந்த காலம் அது. நான்காம் நூற்றாண்டுக்கும் ஒன்பதாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் பல தெற்காசிய நாடுகளில் இந்து மதத்தின் ஆதிக்கம் இருந்தது. அதற்கு முன்னரே பல நாடுகளில் அரசர்கள் முதல் மக்கள் வரை அனைவரும் இந்து மதத்தை ஏற்கத் தொடங்கினர்.

ஆனால் 10 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு நிலைமை மாறத் தொடங்கியது. பிறகு இந்தியாவிற்கு வெளியே உள்ள நாடுகளில் பௌத்தம் மற்றும் இஸ்லாத்தின் செல்வாக்கு அதிகரித்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தெற்காசியாவின் குறைந்தது 8 நாடுகளில் இந்து மதத்தின் செல்வாக்கு எவ்வாறு மிகவும் வலுவாகவும் ஆதிக்கமாகவும் இருந்தது என்பதை இப்போது பார்க்கலாம்.

இந்தோனேசியா

கி.மு 11 ஆம் நூற்றாண்டில் இருந்து அடுத்த 200 ஆண்டுகளுக்கு இந்தோனேசியாவில் இந்து மதம் முக்கிய மதமாக இருந்தது. இக்காலத்தில் இந்து அரசர்களின் ஆட்சி இருந்தது. இந்து மதம் இந்திய பிராமணர்களால் இந்தோனேசியாவிற்கு கொண்டு வரப்பட்டது. அதன் பௌத்தம் செல்வாக்கு பெற்றிருந்தது. ஆனால் 10 ஆம் நூற்றாண்டில் இருந்து, முஸ்லீம் மதம் அங்கு சென்றடைந்தது. அங்குள்ள மன்னர்கள் முஸ்லீம் மதத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, மக்களும் முஸ்லிம்களாக மாறத் தொடங்கினர். ஆனால் இந்தோனேசியாவின் பாலி இன்னும் இந்து பெரும்பான்மை உள்ள பகுதியாகவே உள்ளது.

இப்போது இந்தோனேசியாவின் 27 கோடி மக்கள் தொகையில் 86.7 சதவீதம் பேர் முஸ்லிம்கள் மற்றும் 1.74 சதவீதம் பேர் இந்து மதத்தைப் பின்பற்றுகிறார்கள். பாலி தீவில் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இங்கு 90 சதவீத இந்துக்கள் வாழ்வதாக கூறப்படுகிறது. இந்தோனேசியாவில் இந்து மதம் முறையாக ஆகம இந்து மதம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள இந்து மதத்தில் சாதி முறை நடைமுறையில் இல்லை.

கம்போடியா

கம்போடியாவின் பெரும் மக்கள் தொகை ஒரு காலத்தில் சைவ பக்தர்களாக இருந்தது. கம்போடியா ஒரு காலத்தில் சிவனை வழிபடும் பெரும்பான்மையான இந்துக்கள் வாழ்ந்த நாடாக இருந்தது. கிமு 100 முதல் கிபி 500 வரை கம்போடியாவில் ஃபுனான் பேரரசின் போது இந்து மதம் செழித்தது. அப்போது அரசரும் மக்களும் இந்துக்களாகவே இருந்தனர். அனைவரும் விஷ்ணுவையும் சிவனையும் வணங்கினர். கம்போடியா ஒரு காலத்தில் மிகவும் சக்திவாய்ந்த இந்து மற்றும் பௌத்த கெமர் பேரரசிலிருந்து தோன்றியது. இந்த பேரரசு 11 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் முழு இந்தோசீனா பகுதியையும் ஆண்டது. அந்த நேரத்தில், கம்போடியாவின் மத கலாச்சாரம் சைவ மதமாக இருந்தது. இந்த நிலை 15 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. இதற்குப் பிறகு இந்த நாடு இப்போது புத்த ஆதிக்கமாக மாறிவிட்டது. இன்று, கம்போடியாவில் 97 சதவீத மக்கள் தேரவாத பௌத்தத்தைப் பின்பற்றுகின்றனர்.

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் 6 ஆம் நூற்றாண்டு வரை இந்துக்கள் மற்றும் பௌத்தர்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியாக இருந்தது. இப்பகுதியில் பல்வேறு பகுதிகளில் இந்து மன்னர்கள் ஆட்சி செய்தனர். 11 ஆம் நூற்றாண்டில் பெரும்பாலான இந்து கோவில்கள் அழிக்கப்பட்டன அல்லது மசூதிகளாக மாற்றப்பட்டன. கல்லார், சமந்த்தேவ், அஷ்டபால், பீம், ஜெய்பால், ஆனந்த்பால், பீம்பால், திரிலோச்சன்பால் ஆகியவை ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த முக்கிய இந்து மன்னர்களின் பெயர்கள். தற்போது ஆப்கானிஸ்தானில் இந்து மதத்தை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை வெறும் ஆயிரம் என்கிற அளவில் குறைந்துள்ளது. ஆப்கானிஸ்தானில், 99 சதவீதத்திற்கும் அதிகமான குடிமக்களின் மதம் இஸ்லாம். அதில் 90 சதவீத மக்கள் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள்.

தாய்லாந்து

தாய்லாந்து ஒரு காலத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த நாடு என்று பலரும் நம்புகிறார்கள், ஆனால் அது அப்படி இல்லை. தாய்லாந்து ஒருபோதும் பெரும்பான்மை இந்து நாடாக இருந்ததில்லை, ஆனால் அங்கு எப்போதும் இந்து மதத்தின் செல்வாக்கு இருந்தது. இந்து மதம் அங்கு சிறுபான்மை மதம், 84,400 இந்துக்கள் வாழ்கிறார்கள். ஆனால் தாய்லாந்தில் வலுவான இந்து மத செல்வாக்கு உள்ளது. இந்த நாடு பௌத்த மதத்தைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடு. தமிழ் மற்றும் குஜராத்தில் இருந்து 1800 களின் பிற்பகுதியில் ரத்தினம் மற்றும் ஜவுளித் தொழில்களில் வேலை செய்வதற்காக தாய்லாந்துக்கு குடிபெயர்ந்தனர். அதன் பிறகு, 1890களில், பஞ்சாபிலிருந்து சீக்கியர்கள் அங்கு வந்தனர்

வியட்நாம்

பண்டைய காலங்களில் இந்தியாவின் ஆட்சியின் கீழ் இருந்த நாடுகளில் வியட்நாமும் ஒன்று என கருதப்பட்டது. இந்த நாட்டில் இந்து ஆதிக்கம் இருந்ததில்லை என்றாலும், இந்து மதத்தின் தாக்கம் அங்கு இருந்தது. இப்போதும் சுமார் 70 ஆயிரம் சாம் இந்துக்கள் இங்கு வாழ்கின்றனர். வியட்நாமில் பெரும்பாலான மக்கள் பௌத்தம் மற்றும் பழங்குடி மதங்களைப் பின்பற்றுகிறார்கள். பூர்வீக மதத்தில், உள்ளூர் ஆவிகள், கடவுள்கள் மற்றும் தாய் தெய்வங்கள் வழிபடப்படுகின்றன. இந்த பூர்வீக மதம் இந்து மதத்தைப் போலவே தெரிகிறது. இருப்பினும், ஏழாம் நூற்றாண்டிலிருந்து அல்லது அதற்கு முந்தைய காலத்தில் இந்துக் கோயில்கள் இங்கு இருந்துள்ளன.

பிலிப்பைன்ஸ்

9 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிலிப்பைன்ஸில் இந்து மதம் செல்வாக்கு செலுத்தியது. 1989 இல் கண்டுபிடிக்கப்பட்ட லகுனா செப்புத்தகடு கல்வெட்டு, 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய காலனித்துவ பேரரசுகளின் வருகைக்கு முன்னர் இந்தோனேசியா வழியாக பிலிப்பைன்ஸில் இந்து மதம் செல்வாக்கு பெற்றிருந்ததை காட்டுகிறது. 13 ஆம் நூற்றாண்டில், ஸ்ரீவிஜயா மற்றும் மஜாபஹித் மூலம் இங்குள்ள மக்கள் இந்து மற்றும் புத்த மதத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டனர். அதன் பிறகு, மிஷனரிகள் இங்கு வந்தடைந்தபோது, ​​நாடு பெரும்பான்மையான கிறிஸ்தவ நாடாக மாறியது. இருப்பினும், பிலிப்பைன்ஸில் இந்து மதத்தின் செல்வாக்குடன் இருக்கிறது. இங்கு 351 பழமையான இந்துக் கோயில்கள் உள்ளன. பல இந்துக் கோயில்கள் அழிக்கப்பட்டுவிட்டன.

மாலத்தீவு

மாலத்தீவு பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை இந்து மன்னர்களின் கீழ் இருந்தது. பின்னர் இது பௌத்தத்தின் மையமாகவும் மாறியது. தமிழ் சோழ மன்னர்களும் இங்கு ஆட்சி செய்தனர். ஆனால் அதன் பிறகு மெல்ல மெல்ல முஸ்லிம் தேசமாக மாறத் தொடங்கியது. இஸ்லாம் மாலத்தீவின் அதிகாரப்பூர்வ மதம். முஸ்லிமல்லாத ஒருவர் மாலத்தீவின் குடிமகனாக முடியாது. வரலாற்று சான்றுகள் மற்றும் புனைவுகளின்படி, மாலத்தீவின் வரலாறு 2,500 ஆண்டுகளுக்கும் மேலாக செல்கிறது. மாலத்தீவின் ஆரம்பகால மக்கள் கி.மு 500 இல் இலங்கைக்கு வந்து குடியேறிய குஜராத்திகளாக இருக்கலாம். அங்கிருந்து சிலர் மாலத்தீவுக்கு வந்தனர். மாலத்தீவின் முதல் குடிமக்கள் தேவிஸ் என்று அழைக்கப்படும் மக்கள். அவர்கள் இந்தியாவின் கலிபங்காவிலிருந்து வந்தவர்கள். சௌர் வம்சத்தைச் சேர்ந்த மாலத்தீவின் முதல் மன்னர்களின் வரலாற்றைப் பதிவுசெய்த செப்புத் தகடுகள் நீண்ட காலத்திற்கு முன்பே தொலைந்து போயின. 12ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, அரபு வணிகர்களின் செல்வாக்கின் கீழ், இங்குள்ள மன்னர்கள் முஸ்லிம்களாக மாறத் தொடங்கினர். அதன் பிறகு இஸ்லாமிய வம்சங்களின் ஆட்சி அங்கு தொடங்கியது. அதன் பிறகு மக்களும் முஸ்லிம்களாக மாறத் தொடங்கினர். அதன் பின்னர் இந்த நாடு படிப்படியாக முஸ்லிம் நாடாக மாறியது.

இலங்கை

பௌத்தத்தின் வருகைக்கு முன்னர், இலங்கையில் இந்து மதம் ஆதிக்கம் செலுத்தியது. தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு தமிழர்கள் குடியேறியதன் காரணமாக இந்து மதம் பரவியிருக்கலாம். சோழப் பேரரசின் தென்னிந்தியத் தமிழர்களின் ஆட்சி இலங்கையில் இந்து மதம் வளர காரணமாக இருந்தது. ஒரு காலத்தில் இலங்கையில் 1881 இல் 21.51 வீதமாக இருந்த இந்துக்களின் எண்ணிக்கை 1921 இல் 25 வீதத்தை எட்டியது. ஆனால் இப்போது 12.58 வீதமாகக் குறைந்துள்ளது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக ஆங்கிலேயர்களால் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் இந்தியாவுக்குத் திரும்பினர். அதே போல் 1980 முதல் 2009 வரை இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரால் ஏராளமானோர் அங்கு இருந்த வெளியேறி தமிழகத்தில் குடியேறினர். 2012 ஆம் ஆண்டு தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மக்கள் தொகையில் 70.2% பௌத்தர், 12.6% இந்து, 9.7% முஸ்லீம், 7.4% கிறிஸ்தவர்கள்.

இந்தியாவில் அசோகப் பேரரசர் ஆட்சி செய்த காலத்தில், அவர் தனது மகளை இலங்கைக்கு பௌத்த மதத்தைப் பரப்புவதற்காக அனுப்பியபோது, ​​அங்குள்ள மக்களிடம் பௌத்த மதத்தின் தாக்கம் தோன்றத் தொடங்கியது. அதன் பிறகு இலங்கை பௌத்த நாடாக மாறத் தொடங்கியது. நமது புராணங்களின்படி, பண்டைய காலங்களில் இந்த நாடு குபேரரால் ஆளப்பட்டது. பின்னர் அது ராவணனால் கைப்பற்றப்பட்டது. ராமர் இங்கு வெற்றி பெற்றபோது, ​​ராஜ்ஜியம் விபீஷணனிடம் ஒப்படைக்கப்பட்டது.
இப்படி நம் நாட்டைச் சுற்றியுள்ள பல நாடுகளை இந்து மன்னர்கள் ஆட்சி செய்துள்ளார்கள்.

Recommended For You

About the Author: admin