உயர்தர மற்றும் சாதாரணதர பரீட்சை தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

2025 ஆண்டு முதல் கல்விப் பொதுதராதர உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளை உரிய நேரத்தில் நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் அரசியல் அதிகாரங்களுக்கோ அல்லது வேறு எவருக்கோ பரீட்சை திகதியை சட்டத்தின் மூலம் மாற்ற முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.

அரசியல் அதிகாரங்கள்
மேலும் தெரியவருகையில், இந்த ஆண்டும் பரீட்சைகள் தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் நடத்தப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

2025 ஆம் ஆண்டு முதல் பரீட்சைகளை நடாத்துவதற்கு பிள்ளைகளுக்கு சுமை ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சைகளை உரிய நேரத்தில் நடாத்துவதற்கு நாடாளுமன்ற சட்டத்தின் ஊடாக ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கல்வி அமைச்சருக்கு வழங்கிய பணிப்புரையிலும் காணப்படுகின்றது.

அரசியல் அதிகாரங்களுக்கோ அல்லது வேறு எவருக்கோ பரீட்சை திகதியை சட்டத்தின் மூலம் மாற்ற முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் பரீட்சைகள் பிற்போடப்படுவதனால் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் புலமைப்பரிசில்கள் பெறுவது, வயது வரம்பைத் தாண்டிச் செல்வது போன்ற பல பாதகமான விளைவுகளை மாணவர்கள் சந்திக்க நேரிடும் என அண்மையில் கல்வி நிபுணர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor