நேற்றைய தினம் சிட்னியில் மாறுவன்புல சச்சிதானந்தம் ஜயாவின் சேவையை பாராட்டி நிகழ்ந்த விழா

பொன்னம்பலத்தில் இருந்த திருமுறைகளை மின்னம்பலத்திற்கு கொணர்ந்த தற்கால சோழன் மறுவன்புலவு சிவ சச்சிதானந்தம் ஐயா

நேற்று சிட்னியில் மறுவன்புலவு சிவ சச்சிதானந்தம் ஐயாவின் மிகநீண்ட சேவையைப் பாராட்டி குறிப்பாக தர்மபுரம் ஆதீனம் 26வது குருமகாசன்னிதானம் அவர்களின் அருளாணையின் வண்ணம் தொகுக்கப்பட்டு, 10 ஆண்டுகள் கடுமையாக உழைத்து வெளியிடப்பட்ட பன்னிரு திருமுறைத் தொகுப்புகள் என்ற 16 தொகுதி புத்தகங்களின் ஆணிவேர் மறுவன்புலவு சிவ சச்சிதானந்தம் ஐயா என்பதையும், மற்றும் அவரின் மிகநீண்ட சமயப்பணிகளையும் பாராட்டி, சிட்னி வாழ் சைவத் தலைவர்கள், சிவனடியார்கள் ஒன்றுகூடி பாராட்டு விழாவினை நடாத்தியிருந்தனர். இலங்கைத் தீவில் சைவம் காக்க முன்னின்று உழைக்கும் ஐயாவினை பலரும் பாராட்டினார்.

அறிக்கைகளோடு மட்டுமல்லாது, அனைத்திற்கும் அத்திவாரமாக இருந்து செயற்படுத்தும் ஐயாவின் ஆளுமையையை எண்ணி, குறிப்பாக 82 வயது இளைஞன் என்று பலரும் புகழாரம் செய்தனர். அவரோ எல்லாம் பெருமான் செயல் என்று பெருமானிடம் சரணடைந்து தன்னை மேலும் உயர்திக்கொண்டார்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

Recommended For You

About the Author: webeditor