கொழும்பில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

கொழும்பு வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் யுவதி ஒருவர் ரயிலுக்குள் முன்னால் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த யுவதி உயிரை மாய்த்தமைக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு இராமநாதன் பாடசாலை மாணவி
உயிரிழந்த யுவதியின் உடல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு இராமநாதன் பாடசாலை மாணவி செல்வி சுபகீர்த்தனா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வெள்ளவத்தை புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் நேற்று மாலை 5 மணியளவில் புகையிரதம் மோதுண்டு இறந்துள்ளார்.

அதேவேளை உயிரிழந்த மாணவி இம் முறை க.பொ.த உயர்தர பரீட்சை எழுதிய மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு:

ரயிலுக்குள் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட கொழும்பு இராமநாதன் பாடசாலை மாணவி செல்வி சுபகீர்த்தனா காதல் தோல்வி காரணமாக உயிரை மாய்ந்துகொண்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor