லிந்துல என்போல்ட் குருப் கிளன் ஈகல்ஸ் தோட்டத்தில் இடம்பெற்ற வருடாந்த காமன்கூத்து நாடகம்

லிந்துல என்போல்ட் குருப் கிளன் ஈகல்ஸ் தோட்டம் வருடாந்த காமன்கூத்து நாடகம் 21. 2.2023 ஆரம்பிக்கப்பட்டு 11. 3 .2023.முடிவடைந்தது இதில் 108. வேசங்கள் வருகை தந்திருந்தது. மாஸ்டர் திரு முத்துசாமி உதயகுமார் அவர்களுடைய ஏற்பாட்டில் இதில் உதவியாளராக புகனேஸ்வரன் சத்தியமூர்த்தி ரமேஷ் உதவி மாஸ்டர் திருமதி புஷ்பராணி மற்றும் இளைஞர் தோட்டம் பொது மக்களோடு இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது.

நாங்கள் சில மாஸ்டர்களை பார்த்திருக்கிறோம் அவர்கள் புத்தகம் வைத்துக் கொண்டுதான் பாடல் பாடுவார்கள் உதயகுமார் மாஸ்டர் அவர் கையில் எந்த ஒரு புத்தகத்தையும் நாங்க பார்க்கவில்லை அவருடைய முப்பது வருட அனுபவம் எந்த அளவுக்கு அவர் இந்த காமன் கூத்து நாடகத்தில் ஆர்வம் உள்ளவர் என்று தெரிந்து கொண்டோம்.

இதே போல இருக்கும் மாஸ்டர் அவர்களை சந்திக்க எங்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு அந்த கிராமத்தில் வசதி வாய்ப்புகள் கொஞ்சம் குறைவு ஆனால் அப்படி இருந்தாலும் கூடியது இந்த நாடகத்தை அழகான முறையில் அவர்கள் ஏற்படுத்தி இருந்தார்கள் அந்த கிராமத்து மக்களை பாராட்டக்கூடிய விஷயம் மாஸ்டரிடம் நாங்கள் கேட்டோம்.

இவ்வளவு பொருளாதாரம் பிரச்சனையில் எப்படி இதை நடத்தி வாரிங்க என்று மாஸ்டர் சொன்ன ஒரே வார்த்தை எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் நான் இருக்கும் வரை இந்த காமன் கூத்து நாடகத்தை நடத்துவேன் என்று உதயகுமார் மாஸ்டர் உங்களை நாங்கள் எப்படி பாராட்டுவது என்று எங்களுக்கு தெரியவில்லை மேலும் இந்த கலையினை செய்து கொண்டு போவதற்காக மக்களிடம் ஏதும் உதவிகள் எதிர்பார்க்கிறீர்களா என்று கேட்டேன்.

அவர் சொன்ன வார்த்தை இன்னும் அடுத்த கட்டம் எனக்கு போவதற்கான ஆசை பொருளாதார பிரச்சனை மக்கள் நீதி ஆக உதவி கிடைத்தால் அடுத்த வருடம் இன்னும் மேலதிகமான செய்வதற்கான ஆசைகள் என்னிடம் இருக்கு நண்பர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள் உதயகுமார் மாஸ்டரை இன்னும் இந்த கலையை இன்னும் நீண்ட காலத்துக்கு செய்து கொண்டு போவதற்கு உதவி செய்வீர்களா இருந்தால் அவருடைய தொலைபேசி இலக்கத்தை நான் உங்களுக்கு தருகிறேன் நல்ல உள்ளம் இருந்தால் உங்களால் முடிந்த உதவிகளை செய்து கொடுங்கள் நன்றி வாழ்க வளமுடன்.

Recommended For You

About the Author: webeditor