கச்சதீவில் சங்கிலி அறுப்பில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி

கச்சத்தீவு திருவிழாவில் தமிழக பக்தர் உட்பட இரு பக்தர்களின் தங்க சங்கிலியை அறுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்க ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

திருவிழாவில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்த பெண் பக்தர் ஒருவருடைய 8 பவுண் தங்க சங்கிலி ஒன்று அறுக்கப்பட்டுள்ளது.

பெண்ணுக்கு வலைவீச்சு
தான் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த போது தனக்கு பின்னால் நின்றிருந்த ஆணொருவர் சங்கிலியை அறுத்ததாகவும் அதனை தான் அவதானித்த போது, அந்நபர் அறுத்த சங்கிலியை தனக்கு பின்னால் இருந்த பெண் ஒருவரிடம் கொடுத்ததும் அந்த பெண் கூட்டத்திற்குள் கலந்து அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுவிட்டதாகவும் சங்கிலியை பறிகொடுத்த பெண் பொலிஸாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

இந்நிலையில் சங்கிலி அறுப்பில் ஈடுபட்ட மட்டக்களப்பை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார். அதேவேளை இலங்கையை சேர்ந்த பெண்ணொருவரின் ஒன்றரை பவுண் சங்கிலியும் ஆராதனையின் போது களவாடப்பட்ட நிலையில் அப்பெண்ணின் பின்னாலும் கைது செய்யப்பட்ட நபர் நின்றதை அந்த பெண் அவதானித்துள்ளார்.

இதனையடுத்து இரு பெண்களினதும் சங்கலியையும் கைது செய்யப்பட்ட நபரே அறுத்தார் எனும் குற்றச்சாட்டில் சந்தேகநபராக நெடுந்தீவு பொலிஸாரினால் நேற்றையதினம் ஊர்காவற்துறை பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்தினர்.

இதன்போதே , சந்தேக நபரை 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்ட பதில் நீதவான் , தப்பி சென்றதாக கூறப்படும் பெண் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அப்பெண்ணை கைது செய்து மன்றில் முற்படுத்துமாறும் பொலிஸாருக்கு பணித்தார்.

Recommended For You

About the Author: webeditor