நாட்டை விட்டு வெளியேற தயாராகும் ராஜபக்ச குடும்பம்

இலங்கையை விட்டு வெளியேற ராஜபக்ச குடும்பத்தினர் தயாராகி வருவதாக வெளியாக செய்திகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மறுப்பு தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேறுவதற்காக பொலிஸ் அனுமதி அறிக்கையை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் நாமல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது , நிரந்தர வதிவிடத்தை தவிர நீண்ட காலத்திற்கு தானோ அல்லது தனது குடும்ப உறுப்பினர்களோ இலங்கையை விட்டு வெளியேற மாட்டோம் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

“எனக்கு நிரந்தர வதிவிற்காக அல்லது நீண்ட நாட்களுக்கு கூட நாட்டை விட்டு வெளியில் செல்லும் எந்த திட்டமும் இல்லை. நானும் எனது குடும்பமும் இலங்கையிலேயே இருக்கின்றோம். நாட்டை விட்டு செல்வதில் எமக்கு எந்த நம்பிக்கையும் இல்லை” என்றும் பதிலளித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor