உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட இருக்கும் ல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியாளர்களுக்கான விசேட கலந்துரையாடல்

எதிர் வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஏறாவூர் நகர சபை மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் கட்சியின் பிரதி தலைவருமான அலி ஸாஹிர் மௌலானா வின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

முஸ்லிம் காங்கிரஸின் ஏறாவூர் பிராந்திய காரியாலயத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் எதிர்கால செயற்பாடுகள் , கட்சியின் விரிவாக்கல் பணிகள் என்பன குறித்து ஆராயப்பட்டதுடன் வேட்பாளர்களது சவால்கள் குறித்தும் இங்கு கருத்துக்கள் பரிமாறப்பட்டது.

குறித்த சந்திப்பின் போது ஏறாவூர் நகர சபையின் முன்னாள் முதல்வர் நழீம் , முன்னாள் உறுப்பினர் பிரோஸ் , ஜப்பார், ஜௌபர் உட்பட வேட்பாளர்கள் , கட்சியின் முக்கியஸ்த்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஏறாவூர் பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக தாருஸ்ஸலாம் எனும் கட்சி காரியாலயம் அலி ஸாஹிர் மௌலானா அவர்களது ஒழுங்கமைப்பில் முன்னாள் நகர சபை உறுப்பினர் பெரோசின் ஏற்பாட்டில் கட்சியின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் நேற்றைய தினம் ஏறாவூர் பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor