மகன் இறந்ததை அறிந்ததும் உயிரிழந்த தாய்

கிளிநொச்சியில் மகனின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியில் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா நெடுங்கேணி பகுதியில் மாட்டுடன் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் நேற்றைய தினம் (02-03-2023) உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் நேற்று முன்தினம் (01-03-2023) இடம்பெற்றுள்ளது.

இராசரட்ணம் கனகராஜா என்ற 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர் நேற்று உயிரிழந்துள்ளார்.

மகன் உயிரிழந்த செய்தியை இன்றைய தினம் (03-03-2023) அறிந்த குறித்த குடும்பத்தரின் தாயாரான இராசரட்ணம் வீரம்மா என்ற 82 வயதுடைய முதியவரும் அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் பிரதேச மக்களை சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இருவரது மரண சடங்குகளும் கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியில் இடம்பெறவுள்ளது.

Recommended For You

About the Author: webeditor