வாழ்வில் வரும் சோதனைகளை நீக்கும் பரிகாரம்

சிலருடைய முன்னேற்றம் குறுகிய காலத்தில் இருக்கும். அதாவது ஐந்து வருடத்தில் சாதிக்க வேண்டியதை, ஒரே வருடத்தில் சாதித்து முடித்து விடுவார்கள்.

சில பேருடைய முன்னேற்றம் கொஞ்சம் தாமதமாக இருக்கும். ஒரு வருடத்தில் சாதிக்க வேண்டியதை, ஐந்து வருடமானாலும் சாதிக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள்.

இதற்கெல்லாம் காரணம் நம்மை சுற்றி இருப்பவர்களின் கண் திருஷ்டியும், கெட்ட சக்தியும் என்று கூறப்படுகிறது.

பரிகாரம்
இந்த பதிவின் மூலம் இரண்டு பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது.

விரைவில் சாதனை படைக்க பரிகாரம்

முதலில் கண் திருஷ்டியை போக்குவதற்கான எளிமையான ஒரு பரிகாரத்தை பார்க்கப் போகின்றோம்.

இதற்கு நமக்கு கண்ணுக்கு தீட்டிக்கொள்ளும் மை அதை ஒரு டப்பா எடுத்து கொண்டு பூஜையறையில் வைத்து குல தெய்வத்தை வேண்டிக்கொண்டு பரிகாரத்தை செய்ய தொடங்க வேண்டும்.

ஆண்

தினமும் ஆண்கள் வெளியில் செல்லும்போது இந்த மையை லேசாக எடுத்து கண்ணின் இடது புருவத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வெளியில் தெரியும் படி வைக்க கூடாது. ஒரு சொட்டு எடுத்து தடவிக் கொண்டு வெளியில் சென்றால் கண் திருஷ்டியால் வரும் தடைகள் விலகும்.

பெண்

பெண்களாக இருந்தால் உங்களுடைய இடது கால், கட்டைவிரல் நுனியில் தடவிக் கொள்ளலாம்.

அப்படி இல்லை என்றால் இடது உள்ளங்காலில் கொஞ்சமாக இந்த கருப்பு மையை தடவிக் கொண்டு வெளியில் சென்றால் உங்களுடைய முன்னேற்றம் கண் திருஷ்டியால் பாதிக்கப்படாது.

முன்னேற்றம் தடைபடுவதற்கு காரணம் கிரகங்களின் பிரச்சனைகளாக கூட இருக்கலாம்.

உங்களுக்கு கெட்ட நேரம் நடக்கும் போது எந்த முயற்சி மேற்கொண்டாலும் அதில் வெற்றி காண முடியாது.

துர்க்கை அம்மன் வழிபாடு

சோதனைகளை வெல்ல ஆன்மீகத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு சிறப்பான வழிபாடாக சொல்லப்பட்டுள்ளது.

எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் போய் துர்கை அம்மனை பார்த்து வழிபாடு செய்யுங்கள்.

துர்கை அம்மன் வழிபாடு செய்யும்போது முட்டிப்போட்டு மண்டியிட்டு உங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வை கேட்டால் அந்த தீர்வு உடனே கிடைத்துவிடும். உங்களுடைய வாழ்க்கையில் தடைகள் என்பது இருக்காது. நேரமே சரியில்லை என்றாலும் சரியில்லாத நேரத்தை சரி செய்யும் சக்தி துர்கை அம்மன் வழிபாட்டிற்கு உண்டு

Recommended For You

About the Author: webeditor