சுதந்திரதினத்தை முன்னிட்டு ஜந்து சிறைகைதிகள் விடுதலை!

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பெண் கைதி உட்பட ஐவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளிலிருந்து 588 கைதிகள் இன்று (04.02.2023) விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் குறிப்பி்ட்டிருந்தார்.

சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கைதிகள் விடுதலை
வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.இந்திரகுமார் தலைமையில் பிரதான சிறைச்சாலை சிறைக்காவலர் சந்திரசிறி மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து ஒரு பெண் கைதி உட்பட ஐவர் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Recommended For You

About the Author: webeditor