காரைதீவில் போட்டியிடும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பிலான சுயேற்சைக் குழு வேட்பாளர்கள் அறிமுகம்…

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேச சபையில் சுயேட்சைக் குழு 1ல் அன்னாசிப் பழம் சின்னத்தில் போட்டியிடும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் வேட்பாளர் அறிமுக ஊடக சந்திப்பு இன்றைய தினம் காரைதீவில் இடம்பெற்றது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தலைமயில் இடம்பெற்ற இவ்ஊடக சந்திப்பில் கட்சியின் பிரதான வேட்பாளர் செல்வநாயகம் ரசிகரன் உட்பட வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது சுயேட்சைக் குழுவின் வேட்பாளர்களான ஆ.ஆனந்தசபேசன், க.கோணேசமூர்த்தி, சி.மோகனா, மு.யோகநாதன், பொ.சுசிகலா, மூ.செல்வநாயகம், ஜி.சிந்துஜா, தி.ஹரிபிரசாத், சி.சந்திரவதனி, ம.மேகலா, ந.கேமானந், இ.ரக்சனா, சி.பிறேமா ஆகியோர் இன்றைய தினம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor