வீடொன்றினுள் மர்மமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலம் மீட்பு!

கேகாலை – தெரணியகல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு பெண்களின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட இரு பெண்களும் சகோதரிகள் என்பதுடன், வீட்டிலிருந்த 90 வயதான அவர்களது தாயார் தற்போது தெரணியகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

51 மற்றும் 49 வயதுடைய இரண்டு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரணியகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor