நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவு!

இலங்கையின் பல நகரங்களில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க காற்று தரக் குறியீட்டிற்கு அமைய இலங்கையின் பல நகரங்களில் காற்றின் தரம் 100 முதல் 150 வீதமாக பதிவாகியுள்ளதாக நிறுவனத்தின் காற்று மாசு முகாமைத்துவப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலைமையானது அடுத்த சில தினங்களுக்கும் தொடர்ந்தும் காணப்படும் எனவும் முகாமைத்துவப்பிரிவு கூறியுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் வரை இந்த நிலைமையானது குறைவாக அல்லது அதிகமான நிலையில் நீடிக்கலாம் எனவும் காற்று மாசு முகாமைத்துவப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor