அடுத்த மாதம் முதல் அதிகரிக்கப்பட இருக்கும் கட்டணங்கள்!

கொழும்பு விமானத் தகவல் வலயத்தின் ஊடாகப் பறக்கும் சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்படும் விமானப் போக்குவரத்துக் கட்டணத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன கருத்து தெரிவித்துள்ளார்.

கட்டணங்கள் திருத்தப்படவில்லை
கொழும்பு விமான தகவல் வலயத்தின் ஊடாகப் பறக்கும் சர்வதேச விமானங்கள் தொடர்பான விமானப் போக்குவரத்துக் கட்டணம், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனத்தினால் அறவிடப்படும்.

குறித்த கட்டணங்கள் 1985 ஆம் ஆண்டு முதல் திருத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

அதன்படி, தற்போது அறவிடப்படும் கட்டணத்தை பெப்ரவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தியமைக்க துறைமுகங்கள்,கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor