புணானையில் வேன் – பஸ் வண்டி நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து : ஒரு பலி

கொழும்பு – ஓட்டமாவடி பிரதான வீதியில் புணானையில் சிலாபத்திலிருந்து காத்தான்குடி நோக்கிப் பயணித்த வேனும் கல்முனையிலிருந்து கதுறுவெல நோக்கிப் பயணித்த பஸ் வண்டியும் சற்று முன்னர் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் இப்பாரிய விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிய வருகின்றது.

வேனின் சாரதி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதுடன், ஏனைய ஆறு பேர் காயங்களுக்குள்ளான நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்க்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், அதில் ஒரு சிலரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

அத்துடன், கல்குடா டைவர்ஸ் மற்றும் அகீல் அவசர சேவைப்பிரிவினரும் களத்தில் நின்று தம்மாலான உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபரத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: webeditor