தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து கட்சிகளுக்குமான கலந்துரையாடல் இன்று!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள சகல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களிடம் கலந்துரையாடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைபை்பு விடுத்துள்ளது.

இந்த கலந்துரையாடல் இன்று (24.10.2023) காலை நடைபெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிப்புக்கு பிறகு, அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணைக்குழு கலந்துரையாடுவது இதுவே முதன்முறையாகும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எவ்வாறு நடத்தப்படும்
இந்த கலந்துரையாடலின் போது, தேர்தல் எவ்வாறு நடத்தப்படும் என்பது குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு விரிவாக அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கையும் நேற்று (23.01.2023) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

அத்துடன், உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி இந்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor