தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட விருந்த மர்மப் பொருட்கள் பொலிசாரால் மீட்பு!

இலங்கைக்கு கடத்தவிருந்த தமிழகம் தனுஸ்கோடி கடற்கரையில் மறைத்து வைத்திருந்த பெருமளவு பாதணிகளை தமிழகப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

நேற்று (22-01-2023) இரவு 7.30 மணியளவில் இராமேஸ்வரம் – தனுஸ்கோடி கடற்கரையில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின்போதே இந்த பாதணிகள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்பட்ட பாத அணிகள் 3 உரப் பைகளில் பொதி செய்யப்பட்டு, மறைத்து வைத்திருந்த சமயமே பொலிஸார் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட பாதணிகளின் பெறுமதி இந்திய நாணயத்தில் நூறு ஆயிரம் ரூபாவிற்கும் மேற்பட்ட 306 சோடி சப்பாத்து காணப்பட்டன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor