அரசாங்க வைத்தியசாலைகளுக்கு செல்லும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

அரசாங்க வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை 25 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தனியார் துறையின் மருந்து மற்றும் சிகிச்சைகளின் விலையேற்றம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் தனியாரை நாடிய மக்கள் தற்போது அரச வைத்தியசாலைகளை நாடியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஆய்வக சோதனைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு இருப்பதாகவும் அவர் கூறினார். இதனால், அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளின் அளவு நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வளவு மருந்துகள் நிரப்பப்பட்டாலும், மக்கள் அரசு மருத்துவமனைகளை நாடுவதால், மருந்து பற்றாக்குறையை சமாளிப்பது மிகவும் சிரமமாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.

தற்போது சுமார் 100 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor