2023ஆம் ஆண்டுக்கான பொங்கல் விழாவும் ஐம்பது கதிரைகளும் வழங்கி வைப்பு.!

2023ஆம் ஆண்டுக்கான பொங்கல் விழாவும் ஐம்பது கதிரைகளும் வழங்கி வைப்பு.! பூமணி அம்மா அறக்கட்டளையின் இவ்வாண்டுக்கான பொங்கல் விழா பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்-இலங்கை(ITR) பணிப்பாளருமான வேலணை மேற்கு,சரவணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் ஒழுங்கு படுத்தலில்

யாழ்/சங்குவேலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 18.01.2023 அன்று பாடசாலையின் அதிபர் வீ.சிவாகரன் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளரும் வலிகாமம் தெற்கு பிரதேசசபை சுன்னாகம்,யாழ் மாநகரசபை,வட மாகாணசபை ஆகியவற்றின் முன்னாள் உறுப்பினருமான ந.விந்தன் கனகரட்ணம் கலந்து சிறப்பித்து சிறப்புரையாற்றி பூமணி அம்மா அறக்கட்டளை மூலம்

பாடசாலை மாணவர்களின் பாவனைக்காக,ஒரு லட்சத்து ஐம்பத்தியாறாயிரம் ரூபா பெறுமதியான ஐம்பது கதிரைகளையும் வழங்கி வைத்தார்.மேலும் நிகழ்வில் அறக்கட்டளையின் ஆலோசகர் இ.மயில்வாகனம்,பாடசாலை யின் பழைய மாணவர் சங்க உப பொருளாளர் திருமதி ச.ஜெயந்தினி,பேராசிரியர் திரு யோசேப் இராஜசூரியர் பிரான்ஸ்-லண்டன்,சர்வதேச தமிழ் வானொலி யாழ்ப்பாண கலையக பணியாளர்களான மகிழினி,மதீஷன்,லோஜினி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

Recommended For You

About the Author: webeditor