பாழடைந்த வீட்டினுள் இருந்து இளைஞன் மற்றும் சிறுமி ஆகிய இருவரின் சடலங்கள் மீட்பு!

பாழடைந்த வீட்டில் இருந்து சிறுமி மற்றும் இளைஞனின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சடலங்களை கலேவெல, அடவல பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீட்டில் இருந்து கண்டெடுத்ததாக கலேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமிக்கு 14 வயது என்றும், இளைஞனுக்கு 20 வயது என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம்
இளைஞனுக்கும் சிறுமிக்கும் இடையே காதல் தொடர்பு இருந்ததாக விசாரணைகளில் தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நன்னடத்தையின் பின்னர் சிறுமி சில நாட்களுக்கு முன்னதாக தாயிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor