ஒப்பந்த அடிப்படையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு ஊழியர்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை!

தற்போது இலங்கை போக்குவரத்து சபையில் நிலவும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறை காரணமாக நாளொன்றுக்கு 800 பஸ்களை இயக்க முடியாத நிலை காணப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண சாரதிகள் மற்றும் நடத்துனர்களை நியமிக்க வேண்டும் என அமைச்சர் பந்துல தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் இன்று (18-01-2023) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: webeditor